உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது மீண்டும் பாய்ந்தது குண்டாஸ்

வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது மீண்டும் பாய்ந்தது குண்டாஸ்

வழிப்பறியில் ஈடுபட்டவர் மீதுமீண்டும் பாய்ந்தது குண்டாஸ்சேலம், டிச. 1-சேலம், அழகாபுரம், பெரியபுதுார், பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர், 25. இவர் கடந்த அக்., 25ல், அழகாபுரத்தில் ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி, 15,000 ரூபாய், மொபைல் போனை பறித்துக்கொண்டார். அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். இவர் மீது பள்ளப்பட்டி, இரும்பாலை போலீஸ் ஸ்டேஷன்களில் பல வழக்குகள் இருப்பதும், ஏற்கனவே ஒருமுறை குண்டர் சட்டத்தில் கைது செய்ததும் தெரியவந்தது. இதனால் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் உமா(பொ) உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ