உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலை பணி பாதியில் நிறுத்தம் 5 மாதங்களாக மக்கள் அவதி

சாலை பணி பாதியில் நிறுத்தம் 5 மாதங்களாக மக்கள் அவதி

இடைப்பாடி: இடைப்பாடி ஒன்றியம் ஆவணிப்பேரூர் கீழ்முகம் ஊராட்சி வெள்ளாண்டிவலசு, காமராஜ் நகரில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்கள் பஸ் போக்குவரத்-துக்கும், நகரின் பிரதான சாலைக்கும் வர, தீயணைப்பு நிலையம் உள்ள சாலையை தான் பயன்படுத்துகின்றனர். 1 கி.மீ., உள்ள அச்சாலை குண்டும், குழியுமாக இருந்ததால், முதல்வர் கிராம சாலைகள் திட்டத்தில், 21.45 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்க, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் கடந்த ஆண்டு ஒப்பந்தம் விடப்பட்டது.இதையடுத்து, 6 மாதங்களுக்கு முன் சாலையை உடைத்து பெரிய ஜல்லிக்கற்களால், ஒரு அடுக்கு சாலை போடப்பட்டது. அதன் மீது மற்றொரு அடுக்கு தார்ச்சாலை அமைக்கப்பட வேண்டும். ஆனால், ஜல்லி போட்டு, 5 மாதங்களுக்கு மேலாகியும் அச்சா-லையை சீரமைக்க நடவடிக்கை இல்லை. இதனால் குழந்தைகள், முதியோர் நடந்து செல்ல முடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்-றனர். இருசக்கர வாகன ஓட்டிகளும் தடுமாறியபடி சென்று வருகின்-றனர்.இதுகுறித்து ஒன்றிய அலுவலர்களிடம் கேட்டபோது, 'இங்கு பணியாற்றிய ஒன்றிய உதவி பொறியாளர், கடந்த மாதம் பதவி உயர்வில் வேறு மாவட்டத்துக்கு சென்றார். அதேபோல் வட்டார உதவி செயற்பொறியாளர் பணியிடமும் காலியாக உள்ளது. இதனால் ஏற்கனவே போடப்பட்ட ஜல்லிக்கற்கள் குறித்து அள-வீடு செய்த பின்தான், அதன் மீது புதிதாக சாலை அமைக்க முடியும். அதிகாரிகள் இல்லாததால், அச்சாலையை மேற்-கொண்டு போட இயலாமல் உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை