மனைவியை கொல்ல கணவர் முயற்சி?
சேலம்: சேலம், பூலாவரியை சேர்நதவர் மோகன்ராஜ், 36. தறித்தொழிலாளி. இவரது மனைவி சத்யா, 26. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் நடத்தையில் சத்யா சந்தேகப்பட்டார். இதில் கடந்த, 11ல் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கொசு மருந்தை எடுத்து வாயில் ஊற்றியதாக, சத்யா, அவரது தந்தை சண்முகத்திடம் தெரிவித்துள்ளார். பின், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதில் அதிர்ச்சியடைந்த சண்முகத்தின் தம்பிகள் தர்மா, கந்தசாமி, மோகன் ராஜை தாக்கினர். அவரது மண்டை உடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மோகன்ராஜ் புகார்படி, தர்மா, கந்தசாமி மீது நேற்று முன்தினம் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்தனர். அதேபோல், கொல்ல முயன்றதாக சத்யா புகார்படி, மோகன்ராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.