உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒன்றிய தலைவர்கள் பயன்படுத்தி வந்த ஜீப்கள்; பொறியாளர்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதி

ஒன்றிய தலைவர்கள் பயன்படுத்தி வந்த ஜீப்கள்; பொறியாளர்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதி

வீரபாண்டி: ஒன்றிய தலைவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததால், அவர்கள் பயன்படுத்தி வந்த ஜீப்களை, ஒன்றிய பொறியாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என, அனுமதி அளித்து, ஊரக வளர்ச்சித்துறை ஆணையாளர் பொன்னையா அரசாணை வெளியிட்டுள்ளார்.தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை தவிர்த்து மற்ற, 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர்களின் பதவிக்காலம் கடந்த ஜன.,5ல் நிறைவடைந்தது. ஜன.,6 முதல் வரும் ஜூலை 5 வரை ஒன்றிய தலைவர்களுக்கு பதில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டத்தில் உள்ள, 20 ஒன்றியங்களில் தலைவர்கள் பயன்பாட்டுக்காக கடந்த, 18 மாதங்களுக்கு முன்பு தான், புதிதாக ஏ.சி., வசதியுடன் மகேந்திரா ஸ்கார்பியோ ஜீப்கள் வாங்கி பயன்படுத்தி வந்தனர். இந்த ஜீப்களை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில் வைத்து, அந்த வாகனங்களை ஒன்றிய அலுவலக பொறியாளர்கள் பணிகளை மேற்பார்வையிட பயன்படுத்தி கொள்ளலாம் என, அனுமதி அளித்து ஊரக வளர்ச்சித்துறை ஆணையாளர் பொன்னையா கடந்த ஜன.,20ல் அரசாணை மூலம் உத்தரவிட்டுள்ளார். இதே போல், ஊரக வளர்ச்சி முகமையின் உதவி திட்ட அலுவலர்களும் பணிகளை மேற்பார்வையிட, வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, உத்தரவு பிறப்பித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோருக்கு நன்றி என, சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பேனர்கள் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை