உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி பலி

கிணற்றில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி பலி

கிணற்றில் தவறி விழுந்தகூலித்தொழிலாளி பலி வாழப்பாடி, நவ. 27-வாழப்பாடி, கல்கொத்தி தெருவை சேர்ந்த, சிவலிங்கம் மகன் சூரியா, 18. நேற்று வெள்ளாளகுண்டத்தில் உள்ள விவசாய நிலத்துக்கு கம்பி வேலி அமைக்கும் கூலி வேலைக்கு சென்றார். மதியம், 12:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள, 130 அடி ஆழ கிணற்றில், சூரியா தவறி விழுந்தார். 5 நிமிடத்தில் தகவல் கிடைக்க, வாழப்பாடி போலீசார், தீயணைப்பு துறையினர் வந்தனர். தொடர்ந்து வீரர்கள் கிணற்றில் இறங்கி பார்த்தபோது, சூரியா இறந்து கிடந்தார். உடலை மீட்டு, வாழப்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி