சிறுமிக்கு பாலியல் தொல்லை: லாரி டிரைவருக்கு ஆயுள் சிறை
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்துார், கஞ்சனுார் காலனி, ரயிலடி தெருவை சேர்ந்தவர் அரவிந்த்குமார், 28. லாரி டிரைவரான இவர், 2021 ஜன., 16ல், மணிவிழுந்தான் வடக்கு புதுாரை சேர்ந்த, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து ஆத்துார் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, அர-விந்த்குமாரை கைது செய்தனர்.இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் அரவிந்த்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி நேற்று உத்தர-விட்டார்.