உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மனைவியை கத்தியால் குத்த முயன்றவர் கைது

மனைவியை கத்தியால் குத்த முயன்றவர் கைது

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் அலா-வுதீன், 48. இவரது மனைவி ஜரீனா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். அலாவுதீன், அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததாக, மனைவி கண்டித்துள்ளார். இந்நி-லையில் நேற்று முன்தினம் நாராயணன் நகரில் ஜரீனா நடந்த சென்றபோது, அலாவுதீனிடம் பழகும் பெண் தகராறு செய்-துள்ளார். உடனே அங்கு வந்த அலாவுதீன், மனைவியை தாக்கிய-தோடு, கத்தியால் குத்த முயன்றார். இதை தடுக்க முயன்ற, ஜரீ-னாவின் மகன் அபுபக்கர், சகோதரி மபுநிஷா காயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மபு-நிஷா புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார், அலாவுதீனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ