உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓடும் கார் தீப்பற்றி கருகியது உயிர் தப்பிய பால் வியாபாரி

ஓடும் கார் தீப்பற்றி கருகியது உயிர் தப்பிய பால் வியாபாரி

காடையாம்பட்டி: காடையாம்பட்டி தாலுகா கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கணேசன், 46. பால் வியாபாரியான இவர், நேற்று இரவு, 8:00 மணிக்கு, 'மாருதி 800' காரில், காருவள்ளி அருகே வந்துகொண்-டிருந்தார். அப்போது காரில் புகை ஏற்பட, உடனே நிறுத்தி இறங்-கினார். சிறிது நேரத்தில் நடுரோட்டிலேயே கார் தீப்பிடித்து மள மளவென எரிந்தது. தகவல் அறிந்து அங்கு, 20 நிமிடத்தில் வந்த, காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் கார் முற்றிலும் கருகியது. தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி