உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

சேலம், டிச. 12-சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஓமலுார், எடையப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, 43. கூலித்தொழிலாளியான இவர், 2021 நவ., 26ல் பள்ளிக்கு சென்ற, 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து ஓமலுார் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, பழனிசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு, சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் நேற்று, பழனிசாமிக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை