விபத்தில் விவசாயி பலி சந்தையில் மவுன அஞ்சலி
பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே அம்மாபாளையம் ஊராட்சி பெரிய காட்டூரை சேர்ந்த விவசாயி சுப்ரமணியம், 57. நேற்று அதிகாலை, தாத-காப்பட்டி உழவர் சந்தையில் கீரை விற்க, டி.வி.எஸ்., மொபட்டில் புறப்பட்டார். அவரது மனைவி தேவி, 48, அமர்ந்து சென்றார். அதிகாலை, 5:30 மணிக்கு, நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலையில், பனமரத்துப்பட்டி பிரிவு மேம்பா-லத்தில் சென்றபோது, கனரக வாகனம், மொபட் மீது மோதி-விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த தம்ப-தியர், சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து சேலம் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு செல்லப்பட்ட சுப்பிரமணியம் உயிரிழந்தார். மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று, தாதகாப்பட்டி உழவர் சந்தையில், சுப்ரமணியத்துக்கு விவசாயிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.