மேலும் செய்திகள்
காஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் தீ
23-Dec-2024
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, கடம்பூரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 40. இவரசு பசு மாடு நேற்று காலை, 9:20 மணிக்கு விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு, காலை, 9:35 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 5 நிமிடத்தில் அங்கு வந்த வீரர்கள், கிணற்றில் விழுந்த பசு மாட்டை, ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். மாட்டு பொங்கலன்று கிணற்றில் விழுந்த பசு மாட்டை மீட்டுக்கொடுத்த தீயணைப்பு வீரர்களுக்கு, ரஞ்சித்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
23-Dec-2024