உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மண் கடத்திய டிராக்டர் பொக்லைன் பறிமுதல்

மண் கடத்திய டிராக்டர் பொக்லைன் பறிமுதல்

ஓமலுார், காடையாம்பட்டி தாலுகா கே.என்.புதுார் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில், நள்ளிரவில் அதிகளவிலான மண் வெட்டி கடத்தப்படுவதாக, தாசில்தார் அலுவலகத்துக்கு புகார் சென்றது. நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு காடையாம்பட்டி ஆர்.ஐ., கல்வி மற்றும் செம்மாண்டப்பட்ட ஆர்.ஐ.,பாலாஜி ஆகியோர், கே.என்.புதுாரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, புறம்போக்கு நிலத்தில் மண் வெட்டி கடத்தி வந்த, 2 டிராக்டரை பிடித்து பறிமுதல் செய்தனர். அதிலிருந்த ஓட்டுனர் தப்பிச் சென்றார். ஒரு பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்து தீவட்டிப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி