மேலும் செய்திகள்
சாலை இணையும் இடத்தில் இருளால் விபத்து அபாயம்
22-Dec-2024
பனமரத்துப்பட்டி, ஜன. 1-பனமரத்துப்பட்டி அடுத்த, குரால்நத்தம் பிடாரி அம்மன் கோவில் அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெரியண்ணன், 47. இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி சீனிவாசன், 45, என்பவருக்கும் நிலத்தகராறு இருந்தது.நேற்று, மதியம் இது தொடர்பாக இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். காயமடைந்த பெரியண்ணன், அவரது தாய் முத்துகண்ணு, உறவினர் சுகந்தி ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.பூசாரி சீனிவாசன், அவரது மனைவி கோமதி, மல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.பனமரத்துப்பட்டி போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரிக்கின்றனர்.
22-Dec-2024