உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பராமரிப்பற்ற கழிப்பறை; பெண்கள் அவதி

பராமரிப்பற்ற கழிப்பறை; பெண்கள் அவதி

மகுடஞ்சாவடி: ஏகாபுரம் ஊராட்சி பண்டிதகானுாரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதி பெண்கள் பயன்படுத்த, 20 ஆண்டுக்கு முன், அரசு பள்ளி அருகே கழிப்பறை அமைத்து பயன்பாட்டில் இருந்தது. சரியாக பராமரிக்காததால் தற்போது பாழடைந்து புல், பூண்டு முளைத்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பெண்கள், திறந்தவெளியில் செல்ல வேண்டிய அவல நிலை நேரிடுகிறது. இதனால் கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர, பெண்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை