சாலை மறியலில் ஈடுபட்ட வி.சி., கட்சியினர் கைது
சேலம், துாத்துக்குடி கவின் ஆணவ கொலை செய்யப்பட்டதை கண்டித்து, வி.சி., சேலம் வடக்கு மாநகரம் சார்பில், சேலம் கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். வடக்கு மாவட்ட செயலர் காஜா மொகைதீன் தலைமை வகித்தார். அதில் தமிழக அரசை கண்டித்து, கண்டன கோஷம் எழுப்பினர். டவுன் போலீசார் பேச்சு நடத்தி உடன்பாடு ஏற்படாததால், 21 பேரை கைது செய்தனர்.