உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதலாம் உலகப்போர் நினைவு தினம் அனுசரிப்பு

முதலாம் உலகப்போர் நினைவு தினம் அனுசரிப்பு

சேலம், முதலாம் உலகப்போரில், இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். அவர்களில் சேலத்தில் இருந்து, நுாற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். அவர்களில் வீரமரணம் அடைந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, இன்றும் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நினைவு சின்னமாக வைத்து பராமரித்து வருகின்றனர். முதலாம் உலக போர் நினைவு நாளான நேற்று, அந்த வீரர்கள் கல்வெட்டுக்கு, டி.ஆர்.ஓ., ரவிக்குமார் தலைமையில் சேலம் வரலாற்று சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், மலர் வளையம் வைத்து ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை