சிறுமியை கடத்தி பலாத்காரம் போக்சோ வழக்கில் வாலிபர் கைது
ஆத்துார்:விருதுநகர் மாவட் டம், சாத்துார் அருகே வள்ளிமடையை சேர்ந்த பாலமுருகன் மகன் விக்னேஸ்வரன், 21. கூலித் தொழிலாளியான இவருக்கு, ஆத்துாரை சேர்ந்த, 14 வயது சிறுமியுடன் 'இன்ஸ்டா'வில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த, 12ல், வீட்டில் இருந்த சிறுமியை காணவில்லை. இதுகுறித்து, ஆத்துார் டவுன் போலீசில் அளித்த புகாரில், சிறுமியை தேடி வந்தனர். விசாரணையில், விருதுநகரை சேர்ந்த விக்னேஸ்வரன், கடத்திச் சென்றதும், அச்சிறுமியை பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.சிறுமியை மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆத்துார் மகளிர் போலீசார், கூலித் தொழிலாளி விக்னேஸ்வரன் மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்து, நேற்று அவரை கைது செய்தனர்.