உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை தெப்பக்குளம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் 

சிவகங்கை தெப்பக்குளம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் 

சிவகங்கை, ; சிவகங்கை தெப்பக்குளத்திற்கு வரும் வரத்துக்கால்வாயில் சில வணிக நிறுவனங்கள் தங்களின் கழிவு நீரை விடுவதால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பகுளம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தெப்பகுளத்திற்கு மழை நீர் வர கால்வாய் அமைக்கப் பட்டுள்ளன.பல ஆண்டுகளாக துார்வாரப்படாததால் கால்வாய்கள் அடைபட்டுள்ளன. தெப்பக்குளத்தின் வடக்கு பகுதியில் உள்ள வரத்து கால்வாய் வழியாக கழிவு நீர் தெப்பகுளத்தில் கலக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளன.இது தொடர்பாக கடந்த ஜன. 1ம் தேதி தினமலர் இதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாளச்சாக்கடை செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்தும் சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலப்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நகராட்சி, சிவகங்கை கலெக்டர் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை வரும் ஜூலை 5ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.இந்நிலையில் தெப்பகுளத்திற்கு வடக்குப்பகுதியில் வரும் வரத்து கால்வாயில் மீண்டும் கழிவு நீர் விடப்படுகிறது.இதனால் மழைக்காலங்களில் இந்த கழிவு நீர் அனைத்தும் தெப்பக்குளத்தில் கலக்கும் சூழல் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் வரத்துக்கால்வாயில் கழிவு நீர் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை