உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / துாங்கிய ரேஷன் கடை ஊழியர்; காத்திருந்து திரும்பிய மக்கள்

துாங்கிய ரேஷன் கடை ஊழியர்; காத்திருந்து திரும்பிய மக்கள்

தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சொர்ணநாதன் வீதியில் அமுதம் 10 ம் எண் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இதில் நித்தியராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார்.நேற்று காலை 11:00 மணியளவில் கடைக்கு வந்த நித்தியராஜ் சிறிது நேரத்தில் , கதவை இறக்கி விட்டு மூடை மீது படுத்து துாங்கினார். ரேஷன் பொருட்கள் வாங்க வந்தவர்கள் தவித்தனர். தகவல் அறிந்து வந்த அந்தப் பகுதி கட்சி நிர்வாகிகள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அலுவலகத்தில் இருந்து வந்த அலுவலர் எழுப்பியபோதும் எழுந்திருக்கவில்லை.இது குறித்து அ.ம.மு.க., வட்ட செயலாளர் நல்லுபாண்டி கூறுகையில், இந்த கடை பணியாளர் பொருட்கள் வாங்க வருபவர்களிடம் ஆபாசமாக பேசுவது வழக்கம். இரண்டு முறை பிரச்னை ஏற்பட்டு உள்ளது. தற்போது கடையில் படுத்து கிடக்கிறார். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்புசாமி
ஜூலை 30, 2024 16:05

அவர் நித்திய ராஜ் அல்ல. நித்திரை ராஜ். சரக்கடிச்சுட்டு படுத்திருப்பார். எழுந்தவுடன் டீயும், உளுந்து வடையும் வாங்கிக் குடுங்க. சாப்புட்டு ரேஷன் கடையை திறப்பார்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை