உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வெளிநாடு அனுப்புவதாக மோசடி: 2 பேர் மீது வழக்கு

வெளிநாடு அனுப்புவதாக மோசடி: 2 பேர் மீது வழக்கு

காரைக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மயிலாப்பூரைச் சேர்ந்தவர் கணேசன் மகன் லட்சுமணன் 23. ஊர்க்காவல் படையில் இருந்தவர் சிங்கப்பூர் செல்வதற்காக அதில் இருந்து விலகி, காரைக்குடி கழனிவாசல் தர்மதுரை மகன் கார்த்தி 40 என்பவரது ஸ்கில்ஸ் இன்ஸ்டிடியூட்டில் ரூ. 2 லட்சத்து 41 ஆயிரம் செலுத்தி சேர்ந்துள்ளார். கார்த்தி கூறியதன் பேரில் திருமயம் கோனாபட்டுவைச் சேர்ந்த அடைக்கப்பன் 40 வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் செலுத்தியுள்ளார். லட்சுமணன் உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் சென்னையில் 3 நாட்கள் பயிற்சி முடித்து, வெளிநாடு செல்வதற்கு பல மாதங்களாக காத்திருந்தனர்.எந்த தகவலும் வராததால், இன்ஸ்டிடியூட்டிற்கு சென்று பார்த்தபோது பூட்டிக்கிடந்தது. லட்சுமணன் விசாரித்த போது, இதேபோல் பலரை மோசடி செய்து ஏமாற்றியது தெரியவந்தது. காரைக்குடி போலீசில் லட்சுமணன் புகார் அளித்தார். காரைக்குடி போலீசார் கார்த்தி மற்றும் அடைக்கப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ