உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு ஓய்வு ஊழியர் வட்டக்கிளை கூட்டம்

அரசு ஓய்வு ஊழியர் வட்டக்கிளை கூட்டம்

சிவகங்கை: காளையார்கோவிலில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை கூட்டம் நடந்தது. மூத்த நிர்வாகி லுாயிஸ் தலைமை வகித்தார். துணை தலைவர் ஆரோக்கிய இருதயராஜ் முன்னிலை வகித்தார். செயலாளர் அமல்ராஜ் அறிக்கை வாசித்தார். மாவட்ட இணை செயலாளர் சேசுமணி சந்தா சேர்ப்பது பற்றி பேசினார். சிவகங்கை வட்டக்கிளை தலைவர் தங்கவேலு வாழ்த்துரை வழங்கினார்.மாநில செயற்குழு உறுப்பினர் முத்துமாடன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் பாஸ்கர் நன்றி கூறினார். மாவட்ட தலைவர் திரவியம், செயலாளர் முகம்மது ரபீக், பொருளாளர் ஹக்கீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை