கால்நடைகளுக்கான நடமாடும் மருத்துவ வாகனம் துவக்க விழா தள்ளு...தள்ளு... நிலை அவலம்
சிவகங்கை : சிவகங்கையில் கால்நடைத்துறை சார்பில் நடமாடும் மருத்துவ வாகனத்தை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். விழாவிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி முன்னிலை வகித்தார். இந்த வாகனங்கள் அந்தந்த கால்நடை மருந்தகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். கால்நடை மண்டல இணை இயக்குனர் ராமசந்திரன், நகராட்சி தலைவர் துரை ஆனந்த், துணை தலைவர் கார்கண்ணன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், துணை இயக்குனர் முகமதுகான், உதவி இயக்குனர் ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்மாவட்டத்திற்கு அரசு வழங்கிய 6 கால்நடை நடமாடும் மருத்துவ வாகனத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.
தள்ளு...தள்ளு...தள்ளு...
இந்த விழாவில் துவக்கி வைக்கப்பட்ட 6 புதிய வாகனங்களில், ஒரு வாகனம், இன்ஜின் பழுதாகி நின்றதால், மற்ற ஊழியர்கள் தள்ளிவிட்டும், வாகனம்இயங்காததால் கலெக்டர் அலுவலகம் முன் நிறுத்தி வைத்திருந்தனர்.