உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி, அவரை விலை உயர்வு

மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி, அவரை விலை உயர்வு

மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் பல்லாரி ஒரு கிலோ ரூ. 50க்கும், தக்காளி 80க்கும், அவரைக்காய் ரூ.200க்கும் விற்கப்பட்டது.மானாமதுரை வாரச்சந்தையில் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி, சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக விலை குறைந்து விற்பனை செய்யப்பட்ட தக்காளி இந்த வாரம் ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.விலை குறைவாக இருந்த பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவரைக்காய் ரூ.200க்கும், பெரிய வெங்காயம் ரூ. 50க்கும் சின்ன வெங்காயம் ரூ. 70க்கும் சின்ன பாகற்காய் ஒரு கிலோ ரூ.280க்கும், கத்தரிக்காய் 60க்கும், பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ் ரூ.220க்கும், உருளைக்கிழங்கு ரூ.40 என விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் குறைந்த அளவே காய்கறி வாங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை