உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மணக்குடியில் மஞ்சுவிரட்டு

மணக்குடியில் மஞ்சுவிரட்டு

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் மணக்குடியில் கோயில் விழாவை முன்னிட்டு அனுமதியில்லாமல் நடந்த மஞ்சுவிரட்டு குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மணக்குடியில் ஆதினமிளகி அம்மன், விநாயகர் கோயில் பூத்தட்டு விழா ஆண்டுதோறும் நடைபெறும். விழாவை முன்னிட்டு நேற்று காலை 10:50 மணிக்கு மஞ்சுவிரட்டு துவங்கியது. தொழுவிலிருந்து காளைகள்அவிழ்க்கப்பட்டன. காளைகளை பிடிக்க முயன்றதில் 3 பேர் காயம் அடைந்தனர். காலை முதல் வயல்வெளி,கண்மாய்களில் கட்டுமாடுகளும் அவிழ்க்கப்பட்டன. அனுமதி பெறாமல் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதால் கண்டவராயன்பட்டி போலீசார் ஏற்பாட்டாளர்கள் 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை