உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை-மதுரை அரசு பஸ்சில் மழை நீர் ஒழுகியதால் அவதி

சிவகங்கை-மதுரை அரசு பஸ்சில் மழை நீர் ஒழுகியதால் அவதி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களில் மழை நீர் உள்ளே ஒழுகுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 5 கிளைகள் உள்ளது.இதில் 285 புறநகர் பஸ்களும்,100 டவுன் பஸ்களும் இயக்கப்படுகிறது. மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது. மாவட்டத்திற்குள் இயக்கப்படும் பஸ்கள் பெரும்பாலும் மிகவும் பழையதாகவும் தடதட வென்ற சத்தத்துடன் செல்கிறது. பெரும்பாலான பஸ்களில் இருக்கைகள், ஜன்னல் மற்றும் மேற்பகுதி மிகவும் மோசமாக உள்ளது.மழை நேரங்களில் சில பஸ்களில் தண்ணீர் உள்ளே ஒழுகுகிறது. நேற்று முன்தினம் மாலை 6:15க்கு சிவகங்கையில் இருந்து மதுரை சென்ற TN.63 N 1570 என்ற அரசு பஸ்சின் உட்பகுதி முழுவதும் மழைநீர் வந்துள்ளது. இந்த பஸ்சில் பயணித்த அனைவரும் மழையில் நனைந்தபடியே பயணம் செய்து அவதிப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை