உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்டதேவியில் மக்கள் கண்ணீர் மல்க தரிசனம் உணர்ச்சிகரமாக இருந்தது தென்மண்டல ஐ.ஜி., கண்ணன் பேட்டி

கண்டதேவியில் மக்கள் கண்ணீர் மல்க தரிசனம் உணர்ச்சிகரமாக இருந்தது தென்மண்டல ஐ.ஜி., கண்ணன் பேட்டி

தேவகோட்டை:சிவகங்கைமாவட்டம் கண்டதேவி தேரோட்டத்தில் மக்கள் கண்ணீருடன் சுவாமி தரிசனம் செய்ததை பார்த்த போது உணர்ச்சிகரமாக இருந்ததாக தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் கூறினார். தேவகோட்டையில் அவர் கூறியதாவது: வரலாற்று சிறப்புமிக்கது கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்ட நிகழ்ச்சி. பலகாலமாக நடக்காமல் இருந்து அரசு உத்தரவுப்படி நடத்தி உள்ளோம். எல்லா மதத்தினரும், சமுதாயத்தினரும் எந்த வித வேறுபாடின்றி கலந்து ஒன்றாக இருந்து, எல்லா நாட்டாரும் அவர்களின் வடத்தை விட்டு கொடுத்து எல்லா வடத்திலும் எல்லா சமுதாயத்தினரும் சேர்ந்து தேர் இழுக்கப்பட்டது. ஆரம்பம் முதலே இப்பகுதி மக்களும் எப்படியாவது தேரோட்டத்தை நடத்துங்கள் என்று தான் கூறினர். சிவகங்கை சமஸ்தானமும் பெரிய அளவில் உதவி செய்தது. வெள்ளோட்டத்தில் செய்தது போல செய்தோம். கோர்ட் உத்தரவை முழுமையாக பின்பற்றினோம். இந்த தேரோட்டத்தின் போது மக்களிடம் உணர்ச்சிகரமான காட்சியை பார்க்க முடிந்தது. 18 ஆண்டிற்குப் பிறகு நடப்பதால் எத்தனையோ பேர் கண்ணீர் விட்டு சுவாமியை வணங்கினர். இது தான் இந்த விழாவிற்கு கிடைத்த வெற்றி. இதன்மூலம் இந்தாண்டு மட்டுமில்லாமல் இனி மேல் நிற்காமல் எல்லா ஆண்டும் தேரோட்டம் சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை