உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளிமுன் தேங்கும் கழிவு நீரால் அவதி

பள்ளிமுன் தேங்கும் கழிவு நீரால் அவதி

சிங்கம்புணரி : சிங்கம்புணரி பேரூராட்சியில் சீரணி அரங்கம் பின்புறம் உள்ள துவக்கப் பள்ளி எண் 1ல் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி முன்பாக ரோட்டில் பள்ளமாக இருப்பதால் மழைநீர் வெளியேற வழி இல்லாமல் அதில் குட்டை போல் தேங்கி கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் அத்தண்ணீர் சாக்கடையாக மாறி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உருவாகி மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மழைநீர் தேங்காதவாறு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்