உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் நிறைவு

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் நிறைவு

இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனி பொங்கலான கடந்த ஏப்.4ம் தேதி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.மறுநாள் இரவு மின் அலங்கார தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன் தினம் இரவு பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும்,நேற்று தீர்த்தவாரி உற்சவத்துடன் இந்தாண்டிற்கான பங்குனி பொங்கல் விழா நிறைவு பெற்றது.நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வருகையை யொட்டி வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ