வீரமுத்தி அம்மன் சங்காபிஷேகம்
சிங்கம்புணரி : சிங்கம்புணரி வீரமுத்தி அம்மன் கோவில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி ஆக. 30ம் தேதி மாலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை 8:00 மணி முதல் சங்காபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வீரமுத்தி அம்மன் கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.