உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 70 வயது முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 70 வயது முதியவர் கைது

சிவகங்கை:சிவகங்கை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பெரியசாமி 70. இவர் அந்த கிராமத்தில் உள்ள முனியாண்டி கோயிலில் பூஜாரியாக உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 4ஆம் வகுப்பு சிறுமியை உதவிக்காக அடிக்கடி கோயில் பகுதிக்கு அழைத்துச் சென்றார். இதை பயன்படுத்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தார். சிறுமி தனது தோழிகளிடம் கூறியுள்ளார். அவர்கள் பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளனர். ஆசிரியர் சைல்டு ஹெல்ப்லைன் மூலம் புகார் அளித்தார். சிவகங்கை மகளிர் போலீசார் பெரியசாமியை கைது செய்தனர்.

வாலிபருக்கு ஆயுள்

திண்டுக்கல் மரியநாதபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ் 20. இவர் 2023ல் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொல்லை செய்தார். இதன்வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் செல்வராஜூக்கு ஆயுள் தண்டனை,ரூ.1லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி