உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு சிவகங்கையில் கட்சியினர் வரவேற்பு

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு சிவகங்கையில் கட்சியினர் வரவேற்பு

சிவகங்கை; மக்களை காப்போம்,தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தை சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி நேற்று துவக்கி வைத்து காரைக்குடி, திருப்புத்துார், சிவகங்கையில் நடந்த கூட்டத்தில் அவர் பேசினார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இன்று காலை 10:00 மணிக்கு சிவகங்கையில் பல்வேறு அமைப்புகளுடன் கலந்துரையாடல் நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலையில் மானாமதுரையில் மீண்டும் பிரசார பயணத்தை துவக்குகிறார். நேற்று சிவகங்கை மாவட்டம் வந்த அவரை மாவட்ட செயலாளர், சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் , கூட்டணி கட்சியினர் வரவேற்றன-ர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான கோகுல இந்திரா, தேவகோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன். மணி பாஸ்கரன், காரைக்குடி மாநகர செயலாளர் மெய்யப்பன், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் தேவன், சிங்கம்புணரி எம்.ஜி.ஆர்., மன்ற செந்தில்குமரன்,சிவகங்கை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணை தலைவர் சிவசாமி, மாவட்ட இணை செயலாளர் சிவக்குமார்,காளையார் கோயில் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி,மாவட்ட எம்.ஜி.,ஆர் இளைஞரணி துணைத்தலைவர் எம்.ராஜா, மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் பார்த்திபன், சிவகங்கை மாவட்ட த.மா.கா., காரைக்குடி மாநகர மாவட்ட தலைவர் சார்லஸ் ஜான் கென்னடி.லெனின் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் ஸ்டாலின்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை