அங்கன்வாடி ஊழியர் சங்க கூட்டம்
சிவகங்கை, : சிவகங்கையில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ஜெயமங்கலம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பாக்கியமேரி கோரிக்கையை விளக்கி பேசினார். சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர் உமாநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாவட்ட பொருளாளர் லட்சுமி நன்றி கூறினார். மாநில செயற்குழு முடிவின்படி அங்கன்வாடி திட்டத்தை பாதுகாக்க பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவது என தீர்மானித்தனர்.