வாகனம் மோதி சிறுவன் பலி
பூவந்தி: பூவந்தி அருகே டி. அதிகரையில் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் மீது வாகனம் மோதியதில் உயிரிழந்தார். டி. அதிகரையை சேர்ந்த வர் ரத்னகுமார், கட் டடங்கள் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இவர் வாகனம் வைத்து உள்ளார். இவரது மாற்றுத் திறனாளி மகன் ரமேஷ் 33, நேற்று காலை வாகனத்தை ஓட்டி சென்ற போது அதே ஊரைச் சேர்ந்த தீதையாளன் மகன் ஐந்தரை வயது சிறுவன் கவின் வீட்டு வாசலில் விளையாடி கொண் டிருந்த போது மோதியது. காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பூவந்தி போலீசார் ரமேஷிடம் விசாரிக்கின்றனர்.