உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கஞ்சா  பறிமுதல்: 3 பேர் கைது

கஞ்சா  பறிமுதல்: 3 பேர் கைது

சிவகங்கை,:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே சிலர் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்ததால் எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அங்கு நின்ற திருப்புவனத்தை சேர்ந்த சிலம்பரசன் 31, தமிழரசன் 31, அஜய் 29 , ஆகிய 3 பேரையும் பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் விற்பனைக்காக 1.646 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது மதுரை, திருப்புவனம் ஸ்டேஷனில் பல்வேறு வழக்கு நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி