மேலும் செய்திகள்
மீன்பிடித் திருவிழாவில் மீன்களை அள்ளிய மக்கள்
13-Apr-2025
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் மக்கள் போட்டிபோட்டு மீன்களை பிடித்து சென்றனர். புழுதிபட்டி வில்லிக் கண்மாய் ஆயக்கட்டு பகுதிகளில் கடந்தாண்டு அறுவடைப்பணிகள் முடிவற்ற நிலையில் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது.நேற்று காலை 8:30 மணிக்கு கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளைத் துண்டு வீசி மீன்பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர். கிராமத்தினர் ஊத்தா, பரி, வலை, சேலை உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர். இங்கு கெண்டை, கெளுத்தி, விரால் வகை மீன்களை அதிகளவில் பிடித்து சென்றனர்.
13-Apr-2025