மேலும் செய்திகள்
இன்று இனிதாக...(10.04.2025) திருவள்ளூர்
10-Apr-2025
சிவகங்கை,: புனித வெள்ளியை முன்னிட்டு சிவகங்கை அலங்கார அன்னை சர்ச்சில் மறைமாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம் தலைமையில் புனித வெள்ளி பிரார்த்தனை நடைபெற்றது.காலை 6:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை நற்கருணை ஆராதனை நடந்தது. பின்னர் வியான்னி அருட்பணி மையத்தில் ரத்ததான முகாம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருச்சிலுவை பாதை, மாலை 6:00 மணிக்கு மறைமாவட்ட பிஷப் தலைமையில் புனித வெள்ளி திருச்சடங்கு நடந்தன.இரவு 7:30 மணிக்கு கலைக்குழுவினர் சார்பில் இயேசுவின் திருப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.இரவு 8:30 மணிக்கு துாம்பா பவனி, சர்ச் வளாகத்தை சுற்றி நடந்தது. புனித வெள்ளி ஆராதனையில் பாதிரியார் ஜேசுராஜா, உதவி பாதிரியார் கிளிண்டன், மறைமாவட்ட செயலாளர் பிரான்சிஸ் பிரதாப் உட்பட பங்கு இறைமக்கள் பங்கேற்றனர்.
10-Apr-2025