அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட குழு கூட்டம்
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரமேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். முன்னாள் பொது செயலாளர் பொன்னுப்பாண்டி, முன்னாள் மாவட்ட தலைவர் அன்பழகன், துணை தலைவர் பாண்டி, மற்றும் பி.பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட அளவில் வட்டக்கிளை, மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடத்துவது என தீர்மானித்தனர். பொருளாளர் கலைமணி நன்றி கூறினார்.