மேலும் செய்திகள்
கோயில்களில் பிரதோஷ விழா
14-Dec-2024
சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்
03-Dec-2024
மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி சிவன் கோயில்களில் நடைபெற்ற மார்கழி மாத பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நேற்று பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தியம் பெருமானுக்கும் 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து வெள்ளி உற்சவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலை வலம் வந்தனர். சுவாமிக்கு தீபாராதனைகள் நடைபெற்றன.* இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலிலும்,சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயிலிலும் நடைபெற்ற பிரதோஷ விழாவில் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.திருப்புத்தூர்: திருத்தளிநாதர் கோயிலில் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி-அம்பாள் உட்பிரகாரத்தில்வலம் வந்தார். குன்றக்குடி ஆதினமடத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நேற்று மாலை 4:30 மணிக்கு நந்திக்கு முன் யாகசாலை பூஜைகளை செய்தனர். மாலை 5:30 மணிக்கு நந்தி, உற்சவர், அம்பாளுக்கு அபிேஷக, ஆராதனை நடந்தது.சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதி சிவன் கோவில்களில் மார்கழி பிரதோஷ வழிபாடு நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நேற்று 5 அடி உயர நந்தீஸ்வரருக்கு 18 வகையான அபிஷேகங்களும் சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில்களிலும், கரிசல்பட்டி கைலாசநாதர், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
14-Dec-2024
03-Dec-2024