உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம்

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் திருப்புத்தூர் ரோட்டில் உள்ள காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நடந்தது. மார்ச் 10ல் இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்ததை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. நேற்று மண்டலாபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணி முதல் சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் வளர்த்து பூஜைகளை நடத்தி வைத்தனர். 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாக்குழு சார்பில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ