மேலும் செய்திகள்
நரிக்குடி அம்மன்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு
03-May-2025
காரைக்குடி: காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செஞ்சையில் மண்ணின் மைந்தர்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 12 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஒரு மாட்டிற்கு 9 வீரர்கள் வீதம் நுாற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை அடக்க களமிறங்கினர்.முன்னதாக, போட்டியில் பங்கேற்ற மாடுகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
03-May-2025