சத்துணவு ஊழியர் சங்க செயற்குழு
சிவகங்கை; சிவகங்கையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் பூப்பாண்டியம்மாள் தலைமை வகித்தார். செயலாளர் செல்வராணி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அனைத்து சத்துணவு , அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட நிதி காப்பாளர் நடராஜன், மாநில செயலாளர் பாண்டி, நவநீதன் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் நிறைவுரை ஆற்றினார். பொருளாளர் பிரபா நன்றி கூறினார்.