உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  திருக்கோஷ்டியூரில் இன்று இரவு சொர்க்கவாசல் திறப்பு நாளை ராப்பத்து துவக்கம்

 திருக்கோஷ்டியூரில் இன்று இரவு சொர்க்கவாசல் திறப்பு நாளை ராப்பத்து துவக்கம்

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று இரவு 8:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. நாளை முதல் ராப்பத்து உற்ஸவம் துவங்குகிறது. சிவகங்கை சமஸ்தானத் திற்குட்பட்ட இக்கோயிலில் அத்யயன உத்ஸவத்தில் பகல் பத்து (பகலில் பெருமாளுக்கு சேவை) மற்றும் ராப்பத்து (இரவில் பெருமாளுக்கு சேவை) நடைபெறும். டிச.20 காலை பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளி காப்புக்கட்டி பகல்பத்து உற்ஸவம் துவங்கியது. நேற்று இரவு நாச்சியார் திருக்கோலத்தில் பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து அருள்பாலித்தார். தொடர்ந்து பகல் பத்து உற்ஸவம் நிறைவு அடைந்தது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை 10:00 மணிக்கு பெருமாள் திருமாமணி மண்டபத்தில் சயனத்திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இக்கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரம் நடைபெறும். மாலையில் ராஜாங்க கோலத்திலும், இரவில் தங்கப் பல்லக்கில் ராஜ அலங்காரத்திலும் பெருமாள் எழுந்தருள இரவு 8:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் சொர்க்கவாசல் திறக்கப்படும். நாளை முதல் ராப்பத்து உத்ஸவம் துவங்கும். தினசரி மாலை தாயார் சன்னதியில் பெருமாள் எழுந்தருளலும், சொர்க்கவாசல் கடந்தருளி ஆழ்வார் பாசுரங்கள் சேவித்து நம்மாழ்வார் திருவடி தொழுதலும் ஜன.8 வரை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ