உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சேதமடைந்த குடியிருப்புகள் போலீஸ் குடும்பத்தார் அச்சம்

 சேதமடைந்த குடியிருப்புகள் போலீஸ் குடும்பத்தார் அச்சம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போலீஸ் குடியிருப்புகளில் கான்கிரீட் கூரை மற்றும் சுவர்கள் பெயர்ந்து விழுவதால், ஒருவித அச்சத்துடன் போலீசார் குடும்பத்தினர் வசிக்கின்றனர். சிவகங்கை வாரச்சந்தை அருகே நகர் போலீசாருக்கு 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 8 வீடுகள் உள்ளது.இதில் 40 போலீசாரின் குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த குடியிருப்புகள் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த கட்டடங்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் சில கட்டடத்தின் கூரையில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுகின்றன. சில கட்டடங்கள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. அடிக்கடி கான்கிரீட் சிமென்ட் காரை பெயர்ந்து விழுவதால் சேதம் அடைந்துள்ள கட்டடத்தில் குடியிருக்க போலீசார் குடும்பங்கள் அச்சப்படுகின்றனர். மாவட்ட ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் 24 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 12 வீடுகள் உள்ளது.இதில் தற்போது 70க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசாரின் குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த குடியிருப்புகள் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த கட்டடங்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் சில கட்டடத்தின் கூரைகள் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன.சில கட்டடங்கள் முழுவதும் சேதமடைந்துள்ளது. காளையார்கோவிலில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டபட்ட போலீஸ் குடியிருப்பு உள்ளது. தற்போது குடியிருப்பு முழுவதும் சேதமடைந்துள்ளது.இங்குள்ள 40க்கும் மேற்பட்ட போலீசார் தங்களின் குடும்பத்துடன் தனியார் வாடகை வீடுகளில் குடியிருந்து வருகின்றனர். மாவட்டம் முழுவதிலும் உள்ள போலீசாரின் குடியிருப்பு பராமரிப்பில்லாததால் அவர்களின் குடும்பத்தார் தவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்