உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அஞ்சலகத்தில் குழந்தைகளுக்கு சிறுசேமிப்பு

அஞ்சலகத்தில் குழந்தைகளுக்கு சிறுசேமிப்பு

காரைக்குடி: அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் பாண்டியன் கூறுகையில், காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடப்பட்டது.குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு தொடங்கப்படும் சிறுசேமிப்பு கணக்குகளுக்கு அஞ்சல் துறையின் சார்பில் என் முதல் சேமிப்பு என்ற பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. முகாமை பயன்படுத்தி தபால் சேமிப்பு கணக்கு தொடங்கி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி