மேடை பாடகர் தற்கொலை
தேவகோட்டை: ராமநாதபுரம் மாவட்டம் ஆலம்பாடி முனியாண்டி. தற்போது தேவகோட்டையில் வசிக்கிறார். இவருடைய மகன் ரமேஷ் 32. மேடை பாடகராக இருந்தார். ரமேஷ் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே பிரச்னை இருந்தது. இந்த மன வருத்தத்தில் கண்டதேவிக்கு ஆட்டோவில் சென்றார். அங்குள்ள முட்புதருக்குள் கைலியால் துாக்கிட்டு தற்கொலை செய்தார். ஆறாவயல் போலீசார் விசாரிக்கின்றனர்.