திருட்டு வழக்கில் இருவர் கைது
காரைக்குடி: காரைக்குடி உட்பட பல்வேறு இடங்களில் வீடுகளை உடைத்து தொடர் திருட்டு நடந்து வந்தது. தொடர் திருட்டில் ஈடுபட்ட காரைக்குடி சூடாமணிபுரம் 4வது வீதியைச் சேர்ந்த முத்து மணிகண்டன் 27, காரைக்குடி சந்தைபேட்டையைச் சேர்ந்த சுதன்குமார் 19 இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.