மேலும் செய்திகள்
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு போக்சோ
19-Sep-2025
கும்பகோணம்: கும்பகோணத்தில் 'ஸ்டவ்' வெடித்து தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று காலை இறந்தார். கும்பகோணம் மேலக்காவேரி குசவன் தெருவைச் சேர்ந்தவர் கரிகாலன் (35). இவரது மனைவி லதா (32). இவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லதா வீட்டில் மண்ணெண்னை ஸ்டவில் சமைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லதாவின் சேலையில் தீப்பிடித்தது. பரவிய தீ உடல் முழுவதும் பட்டு லதா பலத்த தீக்காயமைடந்தார். உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச் சை பெற்று வந்த லதா நேற்று காலை இறந்தார். திருமணமாகி ஐந்து ஆண்டுகளில் லதா இறந்ததால் வரதட்சணை கொடுமை காரணமாக இறந்திருக்கலாமா? என்று, கும்பகோணம் ஆர்.டி.ஓ., வெங்கடேசன் விசாரித்து வருகிறார். இது தொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீ ஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025
19-Sep-2025