மேலும் செய்திகள்
என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு
05-Oct-2025
தஞ்சாவூர்: அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியை போலீசார் தேடுகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பொக்கன்விடுதி தெற்கையை சேர்ந்தவர் ஜவகர், 45; வெல்டிங் தொழிலாளி. இவரது தம்பி பிரசாந்த், 40. வெளிநாட்டில் பணிபுரிந்தவர். ஜவகருக்கும், பிரசாந்த்திற்கும் குடும்ப சொத்து தொடர்பாக பிரச்னை இருந்தது. நேற்று காலை, சொத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பிரசாந்த் இரும்பு பைப்பால், ஜவகர் தலையில் தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்தார். பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி ஜவகர் இறந்தார். திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிந்து, பிரசாந்தை தேடுகின்றனர்.
05-Oct-2025