உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் 30. டூவீலரில் சில்வார்பட்டியில் இருந்து தேவதானப்பட்டிக்கு நேற்று முன்தினம் மாலையில் சென்றார். கதிரப்பன்பட்டியில் எதிரே வந்த ஆட்டோ டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன், தேனி மருத்துவக் கல்லூயில் அனுமதிக்கப்பட்டு பலனின்றி இறந்தார். விபத்து ஏற்படுத்திய சில்வார்பட்டி ஆசாரி தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பழனிக்குமார் 33, காயத்துடன் தேனி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை