தேனி: மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 12,611 மாணவர்களில் 11,936 பேர் தேர்ச்சி பெற்று 94.65 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி அதிகம் பெற்றுள்ளனர்.தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் மார்ச் 22 வரை அரசுப்பொதுத்தேர்வு நடந்தது. தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட 35 வகையான பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடந்தது. மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் 70, உதவி பெறும் பள்ளிகள் 15, தனியார் பள்ளிகள் 56 என 141 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பொதுத்தேர்வில் பங்கேற்றனர். தேர்வில் மாணவர்கள் 6060, மாணவிகள் 6551 என மொத்தம் 12,611 பேர் எழுதினர். இதில் 5647 மாணவர்கள், 6289 மாணவிகள் என 11,936 பேர் தேர்ச்சி பெற்றனர். 94.65 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 19வது இடம் பெற்றுள்ளனர்.த்தை பிடித்துள்ளது. இதில் மாணவர்கள் 93.18, மாணவிகள் 96 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக்க பள்ளிகளில் படித்த மாணவர்கள் 99.61 சதவீதம், நகராட்சி பள்ளி மாணவர்கள் 98.36 சதவீதம், ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்கள் 97.78 சதவீதம், பகுதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 96.55 சதவீதம், கள்ளர் பள்ளி மாணவர்கள் 94.12 சதவீதம், உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 93.42 சதவீதம், அரசுப்பள்ளி மாணவர்கள் 90.43 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 93.17 தேர்ச்சி விகிதம் பெற்று மாநிலத்தில் 22 இடத்தை பிடித்தது. இதனை ஒப்பிடுகையில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மாவட்ட அளவில் 3 அரசு மேல்நிலைப்பள்ளி, இரு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, 5 உதவி பெறும் பள்ளிகள், 34 தனியார் மேல்நிலைப்பள்ளிகள் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.கடந்தாண்டு அரசுப்பள்ளி 6, கள்ளர்பள்ளி 2 என மொத்தம் 8 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தன. இந்தாண்டு அரசுப்பள்ளி 3, கள்ளர் பள்ளி 2 என மொத்தம் 5 அரசுப்பள்ளிகள் மட்டும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.